News June 23, 2024
தமிழக மீனவர்கள் 18 பேர் கைது

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேரை, இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, தமிழகத்தின் ராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற மீனவர்கள் 18 பேருடன், 3 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளதால் அவர்களது உறவினர்கள் வேதனையடைந்துள்ளனர்.
Similar News
News September 13, 2025
கதை விடாதீர்கள் MY DEAR CM சார்: விஜய்

மதுரை மாநாட்டில் CM ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு விஜய் பேசியது விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், அரியலூர் பரப்புரையில் அங்கிள் என்ற வார்த்தையை தவிர்த்த அவர், நையாண்டியாக சார் என ஸ்டாலினை குறிப்பிட்டார். மேலும், திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட அவர், இதை பற்றி கேட்டால் கதை விடாதீர்கள் MY DEAR CM சார் எனவும் விஜய் கிண்டலாக பேசினார்.
News September 13, 2025
நாளை ஒரு நாள் மட்டுமே… Gpay, Phonepe-ல் மிகப்பெரிய மாற்றம்

செப்.15 முதல், UPI பரிவர்த்தனைகளுக்கான (P2M) <<17642370>>தினசரி வரம்பு<<>> ₹10 லட்சமாக உயர்த்தப்படுவதாக NPCI அறிவித்துள்ளது. தற்போது UPI மூலம் ஒரு நாளைக்கு ₹1 லட்சம் வரையே அனுப்ப முடியும். இதனால், இன்ஷூரன்ஸ், வரிகள், ஸ்டாக் முதலீடு, கிரெடிட் கார்டு கட்டணங்கள் செலுத்துவதில் சிரமம் உள்ளது. இதை போக்கும் வகையில் இனி ஒருமுறைக்கு அதிகபட்சம் ₹5 லட்சம், ஒரு நாளைக்கு ₹10 லட்சம் என வரம்பு உயர்த்தப்படுகிறது.
News September 13, 2025
Parenting: கர்ப்பிணிகள் செய்யவே கூடாத தவறுகள்

கர்ப்பகாலத்தில் பெண்கள் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். இந்த காலகட்டத்தில் சில தவறுகளை செய்தால் அது தாயையும், சேயையும் பாதிக்கலாம். ➤காபி, டீ-ஐ அதிகமாக அருந்தவேண்டாம் ➤மருத்துவரை கேட்காமல் மருந்துகளை எடுக்க வேண்டாம் ➤அதிகம் நேரம் நிற்காதீர்கள் ➤எதிர்மறையான விஷயங்களை யோசிக்கவோ, பேசவோ கூடாது ➤ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.