News June 23, 2024
தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

இந்திய கடலோரப் பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடத்த சாத்தியக்கூறு உள்ள இடங்களில் கடலோரப் பாதுகாப்புப் படை, கடற்படை, மாநில காவல்துறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அதன்படி, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கடலோரப் பகுதிகளில் ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், படகுகள் உள்ளிட்டவையும், கண்காணிப்பு ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன.
Similar News
News November 16, 2025
பயங்கரவாதியின் வீட்டை தகர்த்ததற்கு J&K CM கண்டனம்

டெல்லி வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்திய உமரின் <<18283443>>வீட்டை தகர்த்ததற்கு<<>> ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயலால் ஒருவரின் கோபம் மட்டுமே அதிகரிக்கும் எனவும், இது எதுவும் இல்லாமலேயே J&K-வில் தீவிரவாத செயல்பாடுகள் குறைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற செயல்களால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும் என்றால், அது எப்போதோ ஒழிந்திருக்கும் எனவும் அவர் பேசியுள்ளார்.
News November 16, 2025
சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய தடை

<<18300654>>சபரிமலை நடை<<>> இன்று திறக்கப்பட்ட நிலையில், சன்னிதானத்தில் இந்த ஆண்டு முதல் கேமரா, செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் 18-ம் படிக்கு மேல் செல்போன் பயன்படுத்தவும், போட்டோ மற்றும் வீடியோ எடுக்கவும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையை ஒட்டி இந்த கட்டுப்பாடுகளை தேவசம்போர்டு விதித்துள்ளது.
News November 16, 2025
தேவதை வம்சம் நீயோ! தேனிலா அம்சம் நீயோ!

2000-ல் உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா திரையுலகில் அறிமுகமான முதல் படம் எது தெரியுமா? தமிழனில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இவர், அதன் பிறகே பாலிவுட், கோலிவுட் வரை சென்று குளோபல் ஸ்டாராக உருவெடுத்தார். இந்நிலையில் ‘வாரணாசி’ பட விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை SM-ல் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் நெஞ்சத்தை கிள்ளாதே பாடலை கேட்க தொடங்கிவிட்டனர்.


