News June 23, 2024

நெல்லை மக்கள் கவனத்திற்கு 

image

பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து சட்டவிரோதமான மதுபானங்களை ஒழிப்பதற்காக, நெல்லை மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன் புது முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதன்படி, கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பது குறித்து தெரியவந்தால் 94981 01765 மற்றும் 94981 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கவும் என்றும், தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 9, 2025

இஎஸ்ஐ பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

image

இஎஸ்ஐ நெல்லை துணை மண்டல அலுவலக துணை இயக்குநர் விவேக் வெளியிட்ட செய்திக்குறிப்பு, இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடந்த 196-வது கூட்டத்தில், தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐசி) உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பதிவு மேம்பாட்டுத் திட்டத்தை அங்கீகரித்துள்ளது. இத்திட்டம் 2025 ஜூலை.1 முதல் டிசம்பர்.31 வரை அமலில் இருக்கும். உரிமையாளர்கள் இஎஸ்ஐசி இணையதளம் விண்ணப்பிக்கலாம் என்றார்.

News July 9, 2025

B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் இங்கே<> கிளிக் <<>>செய்து ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு நெல்லையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News July 9, 2025

நகைக்காக மூதாட்டி வீடு புகுந்து கொலை

image

வள்ளியூர் மின்வாரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி(66). இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மகன் பாலசுந்தர் இவருக்கு நேற்று காலை உணவு கொடுக்க சென்ற போது ருக்மணி தலையில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்சியடைந்தார். இதில் அவர் கழுத்தில் இருந்த 7 பவுன் செயின், 7 பவுன் வளையல் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!