News June 22, 2024
கள்ளச்சாராய வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி கைது

ஆத்தூர் அருகே கள்ளச்சாராயத்தை விற்பனைக்கு கொண்டு சென்ற அதிமுக முன்னாள் நிர்வாகி கல்லாநத்தம் சுரேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கையில் காவல்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், சுரேஷ் குமாரிடமிருந்த 40லி சாராயத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்
Similar News
News September 13, 2025
தொண்டர்களாக மாற மறுக்கும் ரசிகர்கள்?

விஜய் அரசியல் கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டாகிவிட்டது. இன்னும் கட்சி சார்ந்த நிகழ்வுகளுக்கு செல்லும் தவெக தொண்டர்கள், தியேட்டருக்கு செல்வது போன்ற மனநிலையிலேயே உள்ளனர். விஜய்யின் பேச்சை மீறி குழந்தைகளை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது, அருகில் இருக்கும் கட்டடங்கள், மரங்கள் மீதேறி அலப்பறை செய்வது போன்ற நிலையே தொடர்கிறது. இன்றைய சம்பவங்களும் அதையே சொல்கின்றன. தேர்தலுக்குள் இந்த நிலை மாறுமா?
News September 13, 2025
மணிப்பூர் மக்களை மோடி அவமதித்துவிட்டார்: கார்கே

மணிப்பூரில் மோடி செலவிடும் 3 மணி நேரம் மக்கள் மீதான கருணை அல்ல என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். 46 நாடுகளுக்கு பயணம் செய்த மோடிக்கு, சொந்த மக்களுக்கு அனுதாபத்தை தெரிவிக்க நேரமில்லை என குற்றம்சாட்டினார். கடைசியாக ஜனவரி 2022-ம் ஆண்டு தேர்தலுக்காக மட்டுமே மோடி மணிப்பூர் வந்ததாகவும், மோடியின் தற்போதைய பயணத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும் சாடியுள்ளார்.
News September 13, 2025
1 GB பிளானை நீக்கியது குறித்து விளக்கம் கேட்கும் TRAI

எண்ட்ரி லெவல் 1 GB பிளானை நீக்கியது குறித்து ஜியோ, ஏர்டெலிடம் TRAI விளக்கம் கேட்டுள்ளது. இந்த ₹249 பிளானை நீக்கியது கஸ்டமர்களுக்கு மேலதிக சுமைகளை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த பிளான் ஆஃப்லைனில் கிடைப்பதாக ஜியோ தெரிவித்த நிலையில், கஸ்டமர்களின் விருப்ப தேர்வின் அடிப்படையிலேயே பிளான் நீக்கப்பட்டதாக ஏர்டெல் கூறியுள்ளது. தற்போதைய எண்ட்ரி லெவல் பிளான் ₹299 ஆகும்.