News June 22, 2024
கள்ளச்சாராயம் மனிதர்களுக்கு விஷமாவது எப்படி?

சாராயம் காய்ச்சும்போது மெத்தனால் (விஷம்), எத்தனால் (போதைப் பொருள்) இரண்டுமே உருவாகும். வெப்பநிலையை 64.7 டிகிரி செல்சியசுக்கு மேல் வைத்துவிட்டால் மெத்தனால் ஆவியாகிவிடும். தொழிற்சாலைகளில் இந்த வெப்பநிலை முறையாக கண்காணிக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், வெப்பநிலையை கவனிக்காமல் விட்டுவிட்டால் மெத்தனால் அதிகமாகி குடிப்போருக்கு விஷமாகி விடுகிறது.
Similar News
News November 16, 2025
6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்

124 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்துவரும் இந்தியா, தெ.ஆ., அணியின் பந்துவீச்சில் தடுமாறி வருகிறது. இந்திய அணி தற்போது 6 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. அக்சர், குல்தீப் களத்தில் உள்ளனர். ஆட்டத்தை ஃபினிஷிங் செய்வார் என எதிர்பார்த்த ஜடேஜாவும் 18 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நிதானமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஹார்மரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
News November 16, 2025
பண்ணையாரை நாங்க மிரட்ட முடியுமா? ரகுபதி

பாஜகவினரை, திமுகவினர் மிரட்டுவதாக நயினார் நாகேந்திரன் பேட்டி ஒன்றில் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு அமைச்சர் ரகுபதி, ‘நயினார் நாகேந்திரன் ஒரு பண்ணையார்! அவரை போய் நாங்க மிரட்ட முடியுமா?’ என்று கலகலப்பாக பதில் அளித்துள்ளார். நயினார் நாகேந்திரனும் சாந்தமானவர் தான் என்று கூறிய அமைச்சர், திமுக மிரட்டாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் எனவும் குறிப்பிட்டார்.
News November 16, 2025
சமூக நீதியின் சாபமே திமுக: அன்புமணி

சமூகநீதியின் சாபமே தமிழகத்தின் இன்றைய ஆட்சியாளர்கள் தான் என திமுகவை அன்புமணி விமர்சித்துள்ளார். திமுகவினரின் கைகளில் அதிகாரம் கிடைத்தால், சமூகநீதியை காலில் போட்டு நசுக்குவார்கள், அவர்களின் சமூக அநீதிகளை கண்டு அக்கட்சியில் உள்ள வன்னியர்களே கொந்தளித்துள்ளதாகவும் சாடியுள்ளார். திமுக அரசின் சமூகநீதி நம்பிக்கை துரோகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பாமகவினருக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.


