News June 22, 2024
திருநெல்வேலி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 14, 2025
நெல்லையில் புதிதாக உருவாகும் கோட்டம்?

காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ, தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை விருதுநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். தென்காசி பிரிப்புக்குப் பின், நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மகாதேவி கோட்டங்கள் உள்ளன. சேரன்மகாதேவி கோட்டத்தை இரண்டாக பிரித்து, நாங்குநேரியைத் தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார் .
News September 14, 2025
நெல்லையில் திருக்குறள் பயிற்சி கலந்து கொள்ள அழைப்பு

திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை இலக்கிய அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டணமில்லா திருக்குறள் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், தமிழக அரசு திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளவும் வழி காட்டப்படுகிறது என்று பேரவை அமைப்பாளர் ஜெயபாலன் தெரிவித்தார். விபரங்களுக்கு 9842080208 அழைக்கலாம்.
News September 14, 2025
நெல்லை: 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம் – ஆணையர் அறிவிப்பு

நெல்லை மாநகராட்சி கமிஷனர் டாக்டர்.மோனிகா ராணா அறிவிப்பு: மேலப்பாளையம் மண்டலத்தின் சுத்தமல்லி நீரேற்று நிலையம் அருகில் 600 மி.மீ. பிரதான குழாய் உடைப்பால் நீர் இயக்கம் நிறுத்தப்பட்டு சரிசெய்யும் பணி நடக்கிறது. ஆகவே 40, 41, 42, 51, 53, 54, 55 வார்டுகளுக்கு இன்று மற்றும் நாளை அதாவது செப். 14, 15 ஆகிய நாட்களில் குடிநீர் விநியோகம் இருக்காது; பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும். *ஷேர்