News June 22, 2024

தமிழகத்தில் 4 புதிய மாநகராட்சிகள்

image

தமிழ்நாட்டில் அடுத்த 20 நாள்களுக்குள் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என, சட்டப்பேரவையில் அமைச்சர் KN.நேரு அறிவித்துள்ளார். தற்போது 490 ஆக உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்த்தப்படும் என்றும், 21 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நகராட்சிகளின் எண்ணிக்கையும் 139ல் இருந்து 159 ஆக உயர்த்தப்படும் என்றார்.

Similar News

News November 16, 2025

மீண்டும் பிஹார் CM ஆகிறாரா நிதிஷ்?

image

நிதிஷ்குமாரையே பிஹார் CM நாற்காலியில் அமரவைக்க NDA கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவ.19-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் எனவும், இதில் PM மோடி மற்றும் பாஜக CM-கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நிதிஷ் குமார் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை நடக்கவிருப்பதாகவும் பேசப்படுகிறது. மேலும், DCM-மாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

News November 16, 2025

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

image

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிந்தகுஃபா காவல் நிலைய பகுதியின் கீழ் உள்ள பெஜ்ஜி வனப்பகுதியில் நடந்த மோதலில், முக்கிய மாவோயிஸ்ட் தளபதி உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம், இந்த ஆண்டில் இதுவரை சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது.

News November 16, 2025

தமிழ் நடிகர் மரணம்.. கதறி துடிக்கும் குடும்பம்

image

சமூக நீதி கருத்துகளை கலகலப்பான பாணியில் சினிமாவாக அளித்த இயக்குநரும், நடிகருமான வி.சேகர் நேற்றைய முன்தினம் காலமானார். இந்நிலையில், அவரது சொந்த ஊரான தி.மலை, தெய்வாநத்தம் கிராமத்திற்கு சேகரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலை பார்த்த உறவினர்கள், ஊர் மக்கள் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது. சேகரின் பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே, அவரது உடலும் இன்று மதியம் அடக்கம் செய்யப்படவுள்ளது.

error: Content is protected !!