News June 22, 2024
மாடுகள் ஏலம் விடப்படும்: கே.என்.நேரு

நகர்ப்புறங்களில் சுற்றித் திரியும் மாடுகளை, அதன் உரிமையாளர்கள் கட்டுப்படுத்தாவிட்டால் ஏலத்தில் விடப்படும் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு முதல்முறை ₹5000, 2ஆம் முறை ₹10000 அபராதம் விதிக்கப்படும் என்றார். இதே நிலை தொடர்ந்தால் மாடுகள் ஏலம் விடப்படும் எனவும் எச்சரித்தார்.
Similar News
News September 13, 2025
மணிப்பூர் மக்களின் அன்பு நெகிழச் செய்கிறது: PM மோடி

தைரியத்திற்கும் வீரத்திற்கும் பெயர் பெற்றது மணிப்பூர் என <<17697101>>PM மோடி<<>> தெரிவித்துள்ளார். மோசமான வானிலையால் தன்னால் ஹெலிகாப்டரில் வர முடியவில்லை, அதனால் சாலை வழி வந்தேன். சாலை நெடுகிலும் நான் கண்ட காட்சி நெகிழச் செய்ததது, அதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வழி நெடுகிலும் மக்கள் மூவர்ண கொடியை ஏந்தி அன்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
விஜய்யின் கூட்டத்தில் சிக்கிய ப.சிதம்பரத்தின் கார்

பிரச்சாரத்துக்காக திருச்சி சென்ற விஜய்யின் வாகனத்தை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்ததால் அங்கு போர்க்குவரத்து ஸ்தம்பித்தது. இதில், குன்றக்குடி செல்வதற்காக அவ்வழியாக வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரும் சிக்கியதால் பரபரப்பு நிலவியது. சுமார் அரை மணி நேரத்திற்கு, பிறகு போலீசார் வந்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்து ப.சிதம்பரத்தின் காரை அனுப்பிவைத்தனர்.
News September 13, 2025
இனி ‘பால் ஆதார்’ அட்டைக்கு இது கட்டாயம்

5 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் (Baal) ஆதார் அட்டை பெறுவதற்கு இனி பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என UIDAI அறிவித்துள்ளது. முன்னதாக, பிறப்பு சான்றிதழ் அடிப்படையில் ஒரு ஆதார், பெற்றோரின் பயோமெட்ரிக் அடிப்படையில் ஒரு ஆதார் என 2 ஆதார் அட்டைகள் பெறப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் இது நடைமுறைக்கு வரவுள்ளது.