News June 22, 2024
சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடலாமா?

நவகிரகங்களில் ஆயுள் காரகனாக விளங்கக்கூடிய சனிபகவானின் ஆதிக்கத்தை வைத்து மனிதர்களின் ஆயுட்காலமானது அமைகிறது. அந்த சனிபகவானை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் விஷ்ணு எனப்படும் பெருமாள். ஆதலால் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் பெருமாளை வணங்கக் கூடியவர்கள், விரதம் இருப்பவர்கள் அதை தவிர்ப்பது சிறந்தது என ஆன்மீக சாஸ்திரம் கூறுகிறது.
Similar News
News November 16, 2025
பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

திருவாரூர், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பருவமழை காலங்களில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வர். இதற்கான அவகாசம் நேற்றுடன் (நவ.15) முடிவடைந்தது. ஆனால், பல விவசாயிகள் பல்வேறு காரணங்களால் பயிர் காப்பீடு செய்யாததால், கால அவகாசம் கோரப்பட்டது. இந்நிலையில், நவ.30 வரை பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
News November 16, 2025
மாற்றி மாற்றி பேசிய கே.என்.நேரு

திருப்பதி கோயிலுக்கு ₹44 லட்சம் நன்கொடை வழங்கியது குறித்து கே.என்.நேரு புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். கோயிலுக்கு 44 லட்சம் கொடுக்கும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்ற அவர், உறவினர் கொடுத்துவிட்ட பணத்தை கோயிலில் செலுத்தியதாக கூறியுள்ளார். முன்னதாக, நான் பணம் கொடுக்கக்கூடாதா என கோபமாக பேசியிருந்தார். இப்படி இவர் மாற்றி மாற்றி பேசியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
News November 16, 2025
நாளை வெளியே வராதீங்க: முதல் மாவட்டமாக அலர்ட்

நாளை, நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளதாக IMD எச்சரித்துள்ளது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் நாளை, நாளை மறுநாள் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும். எனவே, பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.


