News June 22, 2024
மரணத்திலும் கூட இபிஎஸ் அரசியல் செய்கிறார்: ரகுபதி

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இபிஎஸ் அரசியல் செய்து வருவதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுக அடைந்த தோல்வியை திசை திருப்பும் வகையில் இபிஎஸ் செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், சட்டப்பேரவையில் வாய்ப்பு தரவில்லை என்று அதிமுக கூறுவது அப்பட்டமான பொய் எனச் சாடினார். முன்னதாக அவையில் பேசுவதற்கு தங்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என இபிஎஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
Similar News
News September 13, 2025
ரயிலில் இருந்து ஃபோனை தவறவிட்டா என்ன செய்றது?

உங்கள் ஃபோன் விழுந்த இடத்தில் இருக்கும் கம்பத்தின் எண்ணையும், எந்த ஸ்டேஷனில் உங்கள் ஃபோன் விழுந்தது என்பதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உடனடியாக Railway Helpline-க்கு (182, 139) தொடர்பு கொண்டு இதை தெரிவித்தால் ரயில்வே போலீசார் உங்களுடைய ஃபோனை மீட்டுவிடுவர். பிறகு அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் ஃபோனை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். இந்த முக்கியமான தகவலை பிறருக்கு SHARE செய்யுங்கள்.
News September 13, 2025
விஜய்க்கு எதிராக டிரெண்டாகும் #சனியின்_பயணம்

திருச்சியில் தனது முதல் தேர்தல் பரப்புரையை விஜய் தொடங்கியுள்ள நிலையில், தவெகவினர் திரளாக பங்கேற்று உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். தொண்டர்கள் வெள்ளத்திற்கு இடையே ஏர்போர்ட்டிலிருந்து மரக்கடை பகுதிக்கு விஜய்யின் வாகனம் ஊர்ந்து செல்கிறது. இதனிடையே, விஜய்க்கு எதிராக ஒருதரப்பினர் #சனியின்_பயணம் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். அதேநேரம், #தமிழகவெற்றிக்கழகம் ஹேஷ்டேக்கும் டிரெண்டாகிறது.
News September 13, 2025
நேபாள் அமைதிக்கு இந்தியா உறுதுணை: PM மோடி

நேபாளத்தில் நடந்த Gen-z போராட்டத்தின் போது, அந்நாட்டின் பிரதமர் ராஜினாமா செய்ததால், இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் சுஷிலா கார்கிக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நேபாள மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.