News June 22, 2024
மயிலாடுதுறை:காவல்துறை புகார் எண் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போதை பொருட்கள் வைத்திருப்பது,விற்பனை செய்வது,கடத்துவது உள்ளிட்ட தகவல்களை 9626169492 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாராக தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தகவல் அளிப்பவர் விவரம் பாதுகாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 17, 2025
மயிலாடுதுறை – தரங்கம்பாடியின் ரயில் சேவை!

மயிலாடுதுறை-தரங்கம்பாடி மீட்டர் கேஜ் ரயில் பாதை, பிரிட்டிஷ் அரசால் 1926-யில் திறக்கப்பட்டது. 36 கிமீ நீளம் கொண்ட இப்பாதை செம்பனார்கோயில், திருக்கடையூர், பொறையார் வழியாக சென்றது. இதன் மூலம் பொதுமக்கள் பெரிதும் பயன்பெற்று வந்தனர். ஆனால் வருவாய் குறைவின் காரணமாக 1986ம் ஆண்டு இந்த சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த சேவையை மீண்டும் தொடங்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதை ஷேர் பண்ணுங்க.
News August 17, 2025
மயிலாடுதுறை: LIC நிறுவனத்தில் வேலை! ரூ.88,000 சம்பளம்!

மயிலாடுதுறை மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிகுள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News August 17, 2025
தென்பாதி மகா மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

சீர்காழி தென்பாதியில் உள்ள சாலைகரையாள் எனும் மகாமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நேற்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்களை வைத்து அபிராமி அந்தாதி தேவார பாராயணம் செய்து 108 போற்றி மந்திரங்கள் உச்சாடனம் செய்து திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.