News June 22, 2024
விஷச்சாராய பலிக்கு அரசே பொறுப்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்துக்கு இதுவரை 55 பேர் பலியாகி இருப்பதாகவும், 183 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். விஷச்சாராயம் இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தநிலையில், தாமதமாக சிகிச்சைக்கு வந்ததே உயிரிழப்புக்கு காரணமென அமைச்சர் கூறுவதாகவும், இந்த சம்பவத்துக்கு மாநில அரசே பொறுப்பு என்றும் அவர் சாடினார்.
Similar News
News November 16, 2025
கறார் காட்டும் அஜித்.. AK 64 தயாரிப்பில் சிக்கல்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘AK 64’ படத்திற்கு, அஜித்குமார் ₹185 கோடி சம்பளம் கேட்கிறாராம். படத்தின் பட்ஜெட் ₹300 கோடி என்பதால், அஜித்தின் சம்பளம், பட தயாரிப்பு பணியை பாதிக்கும் என கருதி ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் விலகியுள்ளதாம். அதேபோல், கோல்ட் மைன்ஸ், AGS நிறுவனங்களும் இந்த முதலீட்டை கொண்டு லாபம் ஈட்ட முடியாது என கருதி பின்வாங்கி விட்டனவாம். இதனால் இப்படத்தை தயாரிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
News November 16, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ₹2000?

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ₹2000 வழங்க அரசு திட்டமிடுவதாக கூறப்படுகிறது. DMK ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டில் கொரோனா காரணமாக பரிசு தொகை வழங்கப்படவில்லை. 2023, 2024-ல் ₹1000 வழங்கப்பட்டது. ஆனால், 2025 பொங்கலுக்கு வெறும் பொருள்களை மட்டும் வழங்கியதால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் 2026-ல் தேர்தல் வருவதால் DMK அரசு பொங்கலுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
News November 16, 2025
20 தொகுதிகளை குறிவைக்கும் DMK, ADMK

2021 தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகளில் அதிமுக, திமுக கவனம் செலுத்துகின்றன. தென்காசி, மொடக்குறிச்சி, தி.நகர் உள்ளிட்ட 10 தொகுதிகளில் ADMK – DMK இடையே வெறும் 1000-க்குள் தான் வாக்கு வித்தியாசம். அதேபோல், தாராபுரம், கோவை தெற்கு உள்ளிட்ட 10 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 2000-க்குள். இதனால், இந்த 20 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இரு கட்சிகளும் உள்ளன.


