News June 22, 2024

போட்டித் தேர்வில் முறைகேடு: ₹1 கோடி வரை அபராதம்

image

தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளை தடுப்பதற்கான புதிய சட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. நடப்பாண்டில் NEET, UGC போன்ற முன்னணித் தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க, பொதுத்தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம், 2024 அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மோசடியாளர்களுக்கு 5-10 ஆண்டுகள் சிறை, ₹1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

Similar News

News November 16, 2025

தமிழகத்திலும் பிஹார் ஃபார்முலா

image

பிஹாரில் NDA வெற்றிக்கு சிராக் பஸ்வானின் LJP(RV) முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல், தமிழகத்திலும் பட்டியலின கட்சிகளை ஒருங்கிணைத்து அவர்களின் வாக்குகளை பெற அமித்ஷா முடிவெடுத்துள்ளாராம். பிஹாரில் பட்டியலின கட்சிகள் முக்கிய அரசியல் சக்தியாக மாறியுள்ளன. ஆனால், TN-ல் பட்டியலின கட்சிகள் வளருவதை திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் விரும்புவதில்லை என்றுசொல்லி பிரசாரம் மேற்கொள்ள அமித்ஷா திட்டமிட்டுள்ளாராம்.

News November 16, 2025

போன் திருடுப்போனால் இங்கே மீட்கலாம்!

image

மொபைல் போன்கள் தொலைந்தாலோ, திருடப்பட்டாலோ மத்திய அரசின் ‘www.sanchar saathi.gov.in’ என்ற இணையதளம் வாயிலாக மீட்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இதுவரை திருடுப்போன 41,229 போன்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சைபர் மோசடி அழைப்புகள், உங்கள் பெயரில் யாராவது சிம் கார்டு வாங்கி இருப்பதை தெரிந்து கொள்ளவும் மேற்கூறிய இணையதளத்தை அணுகலாம்.

News November 16, 2025

இந்த செயல்களை செய்தால் ஜாலியாக இருக்கலாம்

image

நமக்கு பிடித்த செயல்களைச் செய்வதால் உடலும் மனமும் ஓய்வு பெறுகிறது. இது தினசரி பதட்டத்தை குறைத்து, மனநிறைவை அதிகரிக்கிறது. வாழ்க்கை எவ்வளவு பிஸியாக இருந்தாலும், சிறிது நேரம் நமக்காக ஒதுக்குவது ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் பெரிய பலன் தரும். அந்த வகையில், என்னென்ன செயல்களில் நாம் ஈடுபடுவது நல்லது என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

error: Content is protected !!