News June 22, 2024
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

குறிஞ்சிப்பாடி அடுத்த சின்னதானங்குப்பம் கிராம மக்கள் இன்று கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் வீடுகளுக்கு இடையே மொபைல் டவர் அமைக்கப்படுகிறது. இதனால் கதிர்வீச்சால் மக்களுக்கும் உடல்நலம் பாதிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மொபைல் போன் டவர் அமைக்கும் பணியை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 10, 2025
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<
News November 10, 2025
கடலூர்: மின்கம்பத்தில் டூவீலர் மோதி விவசாயி பலி

வாழகொல்லையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (50). விவசாயியான இவர் தாமோதரன், வீரமணி ஆகியோருடன் டூவீலரில் வடப்பாக்கம் அருகே நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலர் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 10, 2025
கடலூர்: ரயில் மோதி துடிதுடித்து பலி

விருத்தாச்சலம் ரயில் நிலையம் அருகே நேற்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திருச்சி மார்க்கமாக சென்ற ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து உடலை கைப்பற்றிய விருத்தாசலம் போலீசால் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.


