News June 22, 2024
இன்டர்போல் உதவியுடன் நடக்கும் வழக்கு விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ‘இன்டர்போல்’ போலீசார் உதவியுடன் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடநாடு வழக்கு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் ஷாஜகான், “கோடநாடு கொலை நடந்த ஓரிரு நாட்களில், கனகராஜிக்கு ஏழு எண்ணில் தொடங்கும் வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. யார்? எதற்காக? அழைத்தனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
Similar News
News September 13, 2025
பொன்னில் வடித்த சிலையே ஜான்வி

பாலிவுட், டோலிவுட்டில் கலக்கி வரும் ஜான்வி கபூர், கோலிவுட்டில் எப்போது நடிப்பார் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். அவரின் தாயைப் போலவே வசீகரிக்கும் அழகுடைய ஜான்வி கபூர், இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கிறங்கி போயுள்ளனர். அவருடைய அடுத்த படங்களின் விவரத்தை பார்க்கையில் இன்னும் சில ஆண்டுகளுக்கு தமிழ் ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என தெரிகிறது.
News September 13, 2025
யார் இந்த சுஷிலா கார்கி?

நேபாளின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள சுஷிலா கார்கி அந்நாட்டின் முதல் பெண் PM ஆவார். * இவர் 2016-ல் நேபாள சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக செயல்பட்டவர். * பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தவர். * 1990-ல் சிறை தண்டனை அனுபவித்தவர். * நேபாளில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு குடியுரிமை தருவது தொடர்பான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியவர்.
News September 13, 2025
FIRST LOVE: மறக்க முடியாமல் தவிக்கும் ஆண்கள்

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பெரும்பாலானோர் இன்னமும் தங்கள் முதல் காதலை நினைத்துக் கொண்டிருப்பதாகவும், 10-ல் 4 பேர், சமூக வலைதளங்கள் உதவியுடன் மீண்டும் முதல் காதலோடு தொடர்புகொண்டு (அ) இணைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 10-ல் 4 பேரில் குறிப்பாக ஆண்கள் இன்னும் பழைய காதல் நினைவுகளை சுமப்பதாகவும் பதிலளித்துள்ளனர். உங்களுக்கு எப்படி?