News June 22, 2024
ஒரு சொட்டு கூட குடித்ததில்லை என வாக்குமூலம்?

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததை அடுத்து, சாராயம் விற்பனை செய்த கண்ணுக்குட்டி, அவரது சகோதரர் தாமோதரன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், கண்ணுக்குட்டியிடம் நடத்திய விசாரணையில், இதுவரை தான் ஒரு சொட்டு கூட சாராயம் குடித்தது இல்லை எனவும், தனது தம்பி தாமோதரன் தான் டேஸ்ட் செய்து சொல்வார் எனவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News September 16, 2025
குறுக்கே சுவர் எழுப்பிய மத்திய அரசு: வைகோ

CM ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டதாக வைகோ கூறியுள்ளார். திருச்சி மதிமுக மாநாட்டில் பேசிய அவர், திமுக சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு குறுக்கே சுவர் எழுப்பிய மத்திய அரசு தான் காரணம் என்று விமர்சித்துள்ளார். மேலும், 2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என்பதை இம்மாநாட்டில் பிரகடனம் செய்வதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?
News September 16, 2025
மதமென பிரிந்தது போதும்.. மனதை தொட்ட நிகழ்வு

இந்துவாக பிறந்து, தேவாலயத்தில் வளர்ந்து, இஸ்லாமிய நபராக வாழ்ந்த கதையை ‘சிட்டிசன்’ படத்தில் பார்த்திருப்போம். அதேபோல்தான், கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனது இறுதிச்சடங்கை இந்து முறைப்படி செய்ய விருப்பப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலையில், இஸ்லாமியரான சஃபீர் என்பவர், கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தில் இறுதிச்சடங்கை செய்துள்ளார். இந்த மனதை வருடும் சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
News September 16, 2025
திராவிட கட்சிகள்: அன்று முதல் இன்று வரை

திராவிடர் கழகத்திலிருந்து (1944), திமுக (1949), திமுகவிலிருந்து தமிழ் தேசியக் கட்சி (1949), அதிமுக (1972), மதிமுக (1993) என உருவானது. இவற்றில் திமுக, அதிமுக ஆகியவை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளன. இந்நிலையில், மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சியை தொடங்கியுள்ளார். திராவிட கட்சிகளின் செயல்பாடுகளுக்கு உங்கள் மார்க் எவ்வளவு? ஏன்? என்று கமெண்ட்டில் சொல்லுங்க.