News June 21, 2024
கைப்பற்றிய நோட்டில் 199 பக்கங்களை காணவில்லை

2017ஆம் ஆண்டு பெங்களூரில் தனது வீட்டின் அருகே பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவரிடம் இருந்து தலா 192 பக்கங்கள் கொண்ட 2 நோட்டுப் புத்தகங்களை சிறப்பு புலானாய்வு அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் பலரது மொபைல் எண்கள் மற்றும் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அதில் 199 பக்கங்களை காணவில்லை என காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 457 ▶குறள்: மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். ▶பொருள்: நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.
News September 13, 2025
மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை: ஆதவ் அர்ஜுனா

விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தால் தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். 1967-ல் சாமானிய புரட்சி, 1977-ல் சரித்திர புரட்சி என்ற வரிசையில் 2026-ல் விஜய் தலைமையில் தமிழகம் ஜனநாயக புரட்சியை சந்திக்கும் என அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்ற பிரசார முழக்கம் இனி உலகம் முழுக்க ஒலிக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News September 13, 2025
டிவி பார்க்கும் போது சாப்பிட்டா இவ்வளவு பிரச்னையா!

★டிவியை பார்க்கும் போது கூடுதலாக சாப்பிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ★அவ்வாறு சாப்பிடும்போது ‘போதும்’ என்று மூளை சமிக்ஞை செய்யும். ★ஆனால், கவனம் முழுவதும் டிவி திரையில் இருப்பதால் மூளையின் சமிக்ஞையை உணர முடியாமல் போகும். ★இதனால் விரைவாக சாப்பிட நேரிடும். ★இதன் காரணமாக வயிற்று உப்புசம், அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.