News June 21, 2024

கம்யூ அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் 13 பேர் மீது வன்கொடுமை வழக்கு

image

ஜாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்ததால் மார்க்.,கம்யூ. அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிய வேண்டும் என்று கூறி மார்க்., கம்யூ. கட்சியினர் நெல்லையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை தாக்கிய 13 பேர் மீதும் வன்கொடுமை வழக்கு இன்று (ஜூன்.21) பதிவு செய்யப்பட்டது.

Similar News

News September 14, 2025

நெல்லையில் புதிதாக உருவாகும் கோட்டம்?

image

காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ, தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை விருதுநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். தென்காசி பிரிப்புக்குப் பின், நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மகாதேவி கோட்டங்கள் உள்ளன. சேரன்மகாதேவி கோட்டத்தை இரண்டாக பிரித்து, நாங்குநேரியைத் தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார் .

News September 14, 2025

நெல்லையில் திருக்குறள் பயிற்சி கலந்து கொள்ள அழைப்பு

image

திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை இலக்கிய அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டணமில்லா திருக்குறள் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், தமிழக அரசு திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளவும் வழி காட்டப்படுகிறது என்று பேரவை அமைப்பாளர் ஜெயபாலன் தெரிவித்தார். விபரங்களுக்கு 9842080208 அழைக்கலாம்.

News September 14, 2025

நெல்லை: 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம் – ஆணையர் அறிவிப்பு

image

நெல்லை மாநகராட்சி கமிஷனர் டாக்டர்.மோனிகா ராணா அறிவிப்பு: மேலப்பாளையம் மண்டலத்தின் சுத்தமல்லி நீரேற்று நிலையம் அருகில் 600 மி.மீ. பிரதான குழாய் உடைப்பால் நீர் இயக்கம் நிறுத்தப்பட்டு சரிசெய்யும் பணி நடக்கிறது. ஆகவே 40, 41, 42, 51, 53, 54, 55 வார்டுகளுக்கு இன்று மற்றும் நாளை அதாவது செப். 14, 15 ஆகிய நாட்களில் குடிநீர் விநியோகம் இருக்காது; பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும். *ஷேர்

error: Content is protected !!