News June 21, 2024
வேலூரில் சாராயம் விற்ற 50 பேர் கைது

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களையடுத்து தமிழகம் முழுவதும் சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வேலூரில் கள்ளச்சாராயம் விற்ற 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 667 லிட்டர் கள்ளச்சாராயம், 431 மது பாட்டில்கள், 2400 லிட்டர் கொள்ளளவு கொண்ட சாராய ஊரல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்ற சோதனை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
Similar News
News November 16, 2025
எல்லையற்ற காதலுக்கும் முடிவு உண்டு!

சீனாவில் 2017-ல் ஜான் என்ற பெண் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட, அவரை காப்பாற்ற முடியாது என டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். ஆனால், அவரை உயிருக்கு உயிராக நேசித்த அவரது கணவர், <<18299546>>cryopreservation என்ற முறைப்படி<<>> ஜானின் உடலை 30 ஆண்டுகள் பாதுகாக்க ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தார். ஆனால் சமீபத்தில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், 2-வது திருமணம் செய்துகொண்டார்.
News November 16, 2025
அதிக வாக்கு வாங்கியும் RJD தோற்றது ஏன்?

பிஹார் தேர்தலில் தேஜஸ்வி யாதவின் RJD 25 தொகுதிகளில் மட்டுமே வென்றாலும் வாக்கு சதவீதத்தில் முதலிடம் பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளில் RJD (23%), BJP (20.08%), JD(U) (19.25) வாக்குகள் கிடைத்துள்ளன. பல தொகுதிகளில் 2-வது, 3-வது இடம் பிடித்த RJD வெற்றிக்கு தேவையான வாக்குகளை பெறவில்லை. மேலும், BJP மற்றும் JD(U) தலா 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், RJD 143 தொகுதிகளில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.
News November 16, 2025
ஜீன்ஸ் பேண்டில் கறையா? இனி கவலை வேண்டாம்

ஜீன்ஸ் பேண்டை பொதுவாக துவைப்பதே கடினம், அதுவும் அதில் இருக்கும் கறையை நீக்குவது பெரும் சிரமம். முக்கியமாக மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு இது பெரும் தலைவலியாய் இருக்கும். அனால், எளிதாக ரத்தக் கறை உட்பட அனைத்தையும் நீக்க ஒரு வழி இருக்கு. அதற்கு ஒரு சிறிய பெளலில் உப்பைச் சேர்த்து அதில் 2 மூடி அளவுக்கு சோடா ஒன்றை ஊற்றி மிக்ஸ் செய்து விடுங்கள். உடனடியாக கறைகள் மறைந்துவிடும். SHARE IT


