News June 21, 2024

தாய்-தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ₹5 லட்சம்

image

கள்ளக்குறிச்சி சம்பவத்தில், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு, ₹5 லட்சமும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ₹3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தத் தொகை அவர்களுக்கு 18 வயது முடியும் வரை நிலையான வைப்புத் தொகையாக வைக்கப்படும் எனக் கூறியுள்ள அவர், சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு அரசுத் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

Similar News

News September 16, 2025

ஆசிய கோப்பை: இலங்கை வெற்றி

image

ஆசிய கோப்பை தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 68 ரன்களை விளாசினார். ஆனால், அடுத்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக, 18.5 ஓவர்களில் 153/6 ரன்கள் எடுத்து இலங்கை வெற்றி பெற்றது.

News September 16, 2025

இனி கண்ணாடி வேண்டாம்.. 2 துளி சொட்டு மருந்தே போதும்

image

தூரத்தில் உள்ளவற்றை தெளிவாக பார்க்க, பார்வைத்திறனுக்கேற்ற கண்ணாடிகள், கான்டக்ட் லென்சுகளை பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், ஒரு சொட்டு மருந்தை 2 துளிகள் போட்டால், அதன் மூலம் 2 வருடங்களுக்கு தெளிவான பார்வை கிடைப்பதாக டென்மார்க்கில் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. Pilocarpine, Diclofenac ஆகியவற்றால் இந்த சொட்டுமருந்து உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் கண் கண்ணாடிகளுக்கு குட் பாய் சொல்லலாம்

News September 16, 2025

இறுதி முடிவு எடுத்துவிட்டாரா இபிஎஸ்?

image

செங்கோட்டையன் விவகாரத்தில் இபிஎஸ் இறுதி முடிவு எடுத்துவிட்டார் என்றே தெரிகிறது. தலைமை அலுவலகத்தை சூறையாடியவர்கள், ஆட்சியை கவிழ்க்க MLA-க்களை கடத்தியவர்கள், ஆட்சியை கவிழ்க்க முயன்றவர்கள் ஆகியோரை சேர்க்கவே முடியாது என்று ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவுக்கு கட்சியில் இடமில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் இபிஎஸ். அப்படியானால், அவர்களை சேர்க்க வேண்டும் என்று சொல்லும் செங்கோட்டையனுக்கும் அதே நிலை தானோ?

error: Content is protected !!