News June 21, 2024

கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணை: ராமதாஸ்

image

கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விசாரணையை சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவம் காவல்துறையின் அலட்சியத்தால் நடந்த ஒன்றாக மட்டுமே கருதமுடியாது என்ற அவர், ஆட்சியாளர்களின் ஆதரவுடன் இந்த படுகொலை நடந்துள்ளதாக விமர்சித்தார். இந்த சம்பவத்தில் தவறு செய்த அனைவரையும் தண்டிக்கவும் வலியுறுத்தினார்.

Similar News

News September 12, 2025

ஆண்மையை இழக்க நேரிடும்… ஆண்களுக்கு WARNING!

image

சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை பாதிக்கும் என்கிறது ஆய்வு முடிவு. ஆகவே, பின்வரும் உணவுகளில் கவனம் தேவை: *துரித, உடனடி & பாக்கெட் உணவுகள் -இதிலுள்ள டிரான்ஸ் கொழுப்பு ஆபத்தானது *அதிக கொழுப்பு உள்ள பால் பொருள்கள் *பூச்சிக்கொல்லிகள் & BPA ரசாயனம் கலந்த காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் *சோயா உணவுகள் – இதன் உட்பொருள் ஹார்மோன் சமநிலையை பாதிக்கும். SHARE IT

News September 12, 2025

கில்லுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஏன்?

image

இந்திய அணியை 3 ஃபார்மெட்களிலும் நீண்ட காலம் வழிநடத்தும் திறன் கில்லுக்கு இருப்பதாக முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். அதனால் தான் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், ஆனால், அதுவே அவருக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் என்றும் ஜடேஜா கூறியுள்ளார். மேலும், கில் ஒரு Consistency-ஆன வீரர் எனவும், அதனால் தான் அவர் மீது பலரும் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

OFFICIAL: நேபாள் இடைக்கால அரசு தலைவராகும் சுசீலா

image

நேபாள் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. அந்நாட்டின் இடைக்கால அரசு தலைவராக, முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, இன்று இரவு பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுசீலாவின் பதவியேற்பிற்காக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தயார் செய்யப்பட்டு வருகிறது. GEN Z போராட்ட குழு – ராணுவம் இடையே இன்று நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில், சுசீலாவை இடைக்கால PM-ஆக ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

error: Content is protected !!