News June 21, 2024
நெல்லை தோரோட்டம்: 2வது முறை அறுந்த வடம்!

நெல்லையப்பர் அருள் தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில் தேரோட்ட விழா இன்று(ஜூன் 21) காலை கோலாகலமாக தொடங்கியது. முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என தேரை வடம் பிடித்து இழுக்கும்போது 3 வடம் அறுந்து விழுந்தது. இதனை 1 மணி நேரத்தில் சரிசெய்து பணி தீவிரமாக நடைபெற்று முடிந்த நிலையில், தேரை வடம் பிடித்து இழுத்தபோது 4வது வடமும் அறுந்து விழுந்தது. இதனால் மீண்டும் தேர் இழுப்பது தாமதமாகியுள்ளது.
Similar News
News November 12, 2025
நாங்குநேரி அருகே வேன் கவிழ்ந்து விபத்து; 5 பேர் காயம்

நாங்குநேரி அருகே உள்ள பகுதியில் இன்று மதியம் 2 மணி அளவில் வேன் நான்கு வழி சாலை அருகே உள்ள இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக சென்று கொண்டிருந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 12, 2025
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கால அட்டவணை வெளியீடு

தலைமை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படியும் உத்தரவு படியும் திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற ஒன்று ஒன்று 2026ம் ஆண்டு தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளுக்கான கால அட்டவணைகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கிறார். அதன்படி வருகின்ற கணக்கெடுப்பிற்கான காலம் வாக்குச்சாவடி மறு வரையறை வாக்காளர் பட்டியல் என கால நிர்ணயம்.
News November 12, 2025
BREAKING நாய் கடித்த நெல்லை இளைஞர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஐயப்பன்(31). இவர் காவல்கிணறு பகுதியில் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரை நாய் கடித்தது. இதற்கு அவர் சிகிச்சை பெறாமல் இருந்து வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


