News June 21, 2024
விக்கிரவாண்டியில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஜூன் 14ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு மீது 24ஆம் தேதி பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற 26ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 10இல் வாக்குப்பதிவும், 13இல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக புறக்கணித்த நிலையில், திமுக, பாமக போட்டியிடுகின்றன.
Similar News
News November 15, 2025
கேப்டனாக ருதுராஜ் தொடர்வார்: CSK

CSK கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என அணி நிர்வாகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. டிரேட் மூலம் ராஜஸ்தானிடம் இருந்து சஞ்சு சாம்சனை CSK வாங்கியதால், அவர் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக CSK அணி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அவரது தலைமையில் கடந்த 2 சீசன்களாக CSK பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. இந்த முடிவு சரியானதா?
News November 15, 2025
இந்திய மார்க்கெட்டில் இந்த போன் தான் ராஜா!

இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் ஐபோன் தான் ஆதிக்கம் செலுத்துகிறது என நீங்கள் நினைத்தால், அது தவறு. நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வாழும் இந்தியாவில், பட்ஜெட் விலையில் கிடைக்கும் போன்கள் தான் மார்க்கெட்டின் ராஜாவாக உள்ளன. அப்படி இந்தியர்களை அதிகளவில் கவர்ந்த டாப் 8 இடத்தில் உள்ள போன்களின் லிஸ்டை கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். நீங்க என்ன போன் யூஸ் பண்றீங்க?
News November 15, 2025
BREAKING: அதிமுகவுடன் கூட்டணி… அறிவித்தார்

2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவதாக ஃபார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, ஃபார்வர்டு பிளாக் கட்சியின் கதிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள், EPS-ஐ நேரில் சந்தித்தனர். அப்போது, EPS-க்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.


