News June 20, 2024
விஷச்சாராய பலி எண்ணிக்கை 39ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. மேலும் 90க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கருணாபுரத்தை சேர்ந்த சுரேஷின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயம் குடித்ததால் இத்துயரம் நிகழ்ந்துள்ளது. தற்போது அந்த கிராமத்தில் இறுதிச்சடங்களுக்கு வேலை செய்வதற்கு கூட யாரும் இல்லை எனக் கூறி பெண்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
Similar News
News November 15, 2025
100 நாள் வேலை திட்டத்தில் இனி 4 மணி நேரம் வேலை

₹2,000 உதவித்தொகையை ₹6,000 ஆக உயர்த்த கோரி தமிழகம் முழுவதும் கடந்த 11-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் அவர்களை அழைத்து பேசினார். இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் கூறும்போது, உதவித்தொகை ₹1,000 உயர்த்தப்படும்; மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் இனி 4 மணி நேரம் வேலை செய்தால் போதும் என தலைமை செயலாளர் உறுதியளித்ததாக தெரிவித்தனர்.
News November 15, 2025
மணிரத்னம் ஹீரோயினாக ஆசை: கயாடு லோஹர்

‘டிராகன்’ படம் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட கயாடு லோஹர், நல்ல கதையம்சம் இருந்தால் எந்த ஹீரோவுடனும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார். அதேநேரம், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும், கவுரி கிஷன் மீதான உருவகேலிக்கு பதிலளித்த அவர், எல்லா துறைகளிலும் விமர்சனங்கள் வரும், அதிலிருந்து தப்பவே முடியாது என்றும் கூறியுள்ளார். இவர் ‘STR 49’ படத்தில் நடித்து வருகிறார்.
News November 15, 2025
விஜய் கட்சியில் முன்னாள் MLA-க்கள் இணைந்தனர்

திராவிட கட்சிகளான திமுக, அதிமுக போலவே, விஜய்யும் தமிழகம், புதுச்சேரியில் தனது கட்சியை வலுப்படுத்த தொடங்கியுள்ளார். இந்நிலையில், புதுச்சேரி பாஜக முன்னாள் MLA சாமிநாதனும், காரைக்கால் அதிமுக முன்னாள் MLA அசனாவும் தவெகவில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் புஸ்ஸி ஆனந்துக்கு மிக நெருங்கிய நண்பர்கள். அவர்களுக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என தெரிகிறது.


