News June 20, 2024
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வாக்குறுதி என்ன ஆனது?

ஜெயலலிதா ஆட்சியில் டாஸ்மாக் அனைத்தும் மூடப்பட்டு முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதற்கு ஏதுவாக சில கடைகள் மூடப்பட்டன. பிறகு தேர்தலில் திமுகவும் மதுவிலக்கு குறித்து பிரசாரம் செய்தது. இருப்பினும் 2 கட்சிகளும் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் கொண்டு வரவில்லை. ஆதலால், இனிமேலும் இந்த விவகாரத்தில் தாமதிக்காமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Similar News
News September 15, 2025
தமிழகத்தில் 8 நாள்களுக்கு மழை: IMD

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம். செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம் மாவட்டங்களில் 17-ம் தேதி கனமழை பெய்யும் என IMD கூறியுள்ளது. இதனால் குடையை ரெடியா வையுங்க மக்களே..!
News September 15, 2025
என்ன முடிவு எடுக்கப்போகிறார் செங்கோட்டையன்?

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று கலகக்குரல் எழுப்பியுள்ள செங்கோட்டையன், EPS-க்கு விடுத்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதனால், இன்று அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக இன்னும் சற்றுநேரத்தில் தனது ஆதாரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
News September 15, 2025
மூலிகை: ஆமணக்கும் அற்புத மருத்துவ குணங்களும்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
◆ஆமணக்கு எண்ணெய் மூட்டு & தசை வலியைப் போக்க சிறந்தது.
மேலும், முகப்பரு, தோல் வறட்சி, முடி வளர்ச்சி போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.
◆கண்கள் சிவந்திருந்தால், இந்த எண்ணெய்யை 2 துளியை கண்களில் விட குணமாகும்.
◆ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலையைச் சேர்த்து அரைத்து, எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் எடுத்து கொண்டால், மஞ்சள் காமாலை குணமாகும். SHARE.