News June 20, 2024
காலையில் எழுந்ததும் மறந்தும் இதை செய்து விடாதீர்கள்

காலையில் எழுந்ததும் சிலவற்றை மறந்தும் பார்க்கக் கூடாதென ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அதாவது, காலையில் எழுந்ததும் நிழலை பார்ப்பது அசுபமாக கருதப்படுகிறது. இதேபோல், காலையில் எழுந்ததும் கழுவாத பாத்திரங்களை கண்டால் அது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இது பொருளாதார சிக்கலுக்கும் வழிவகுக்கும். காலையில் எழுந்தவுடன் உடைந்த சிலைகளைக் கண்டால், பிரச்னைக்கு வழிவகுக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
Similar News
News September 15, 2025
திமுகவில் இணையும் அதிமுகவின் அடுத்த தலைவர்!

தோப்பு வெங்கடாசலம் வரிசையில் அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் தனது ஆதரவாளர்கள் 5,000 பேருடன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மாபெரும் விழாவை நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாம். உள்கட்சி பூசல் காரணமாக Ex அமைச்சர் அன்வர்ராஜா, Ex MP மைத்ரேயன் என அடுத்தடுத்து அதிமுக புள்ளிகள் திமுகவில் ஐக்கியமான நிலையில், K.A.செங்கோட்டையன் விவகாரத்தால் கொங்கு மண்டலத்தை திமுக குறிவைத்துள்ளது.
News September 15, 2025
ரெக்கார்டுகளை வரிசைக்கட்டிய கேப்டன் SKY!

Pak-க்கு எதிரான போட்டியில் கேப்டன் SKY, 37 பந்துகளில் 47* ரன்களை விளாசி, அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் அவர் 2 ரெக்கார்டுகளை படைத்துள்ளார்.
➱T20-ல் Pak-க்கு எதிராக, இந்திய கேப்டனின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முதல் இடத்தில் கோலி(57) உள்ளார்.
➱Pak-க்கு எதிராக T20 போட்டியை வென்ற 3-வது கேப்டன் என்ற சாதனையையும் SKY படைத்துள்ளார். முன்பாக தோனி, ரோஹித் ஆகியோரும் Pak-க்கை வென்றுள்ளனர்.
News September 15, 2025
தூக்கத்தை இழந்த திமுகவினர்: நாராயணன் திருப்பதி

அண்ணாமலையால் திமுகவினர் தூக்கமின்றி தவித்துக் கொண்டிருப்பது உலகறிந்த உண்மை என்று அமைச்சர் கோவி.செழியனுக்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். உங்களை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தால் அத்தனை வண்டவாளங்களும் வெளிச்சத்திற்கு வந்து விடும் என எச்சரித்த அவர், அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்தை காலம் உறுதி செய்யும். அப்போது நீங்கள் காலாவதியாகியிருப்பீர்கள் என்றும் சாடியுள்ளார்.