News June 20, 2024
4,300 கோடீஸ்வரர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள்!

2023-24 ஆம் நிதியாண்டில் 4,300 கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று சர்வதேச முதலீட்டு ஆலோசனை நிறுவனம் ஹென்லி & பார்ட்னர்ஸ் கணித்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், “உலகளவில் சீனா, இங்கிலாந்து ஆகிய இருநாடுகளும் அடுத்தபடியாக இந்திய கோடீஸ்வரர்கள் அதிகளவில் புலம்பெயர்கின்றனர். இந்தாண்டு அவர்களில் பெரும்பாலோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தேர்வு செய்வார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
அனில் அம்பானி மீது பிடியை இறுக்கும் மத்திய அரசு

வரும் திங்கள்கிழமை நேரில் ஆஜராக <<17314173>>அனில் அம்பானி<<>>க்கு ED மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வீடியோ காலில் ஆஜராக விடுத்த கோரிக்கையும் மறுத்துள்ளது. முன்னதாக, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்திற்கு (ADAG) எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, ADAG குழுமத்திற்கு சொந்தமான 4 நிறுவனங்கள் தற்போது கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளது.
News November 15, 2025
பிஹார் ‘சிங்கம்’ தோல்வி

பிஹாரில் 2 தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட்ட ஷிவ்தீப் லண்டே தோல்வியை சந்தித்துள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், தனது பணி காலத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்ததால், பிஹாரின் ‘சிங்கம்’ என்று அழைக்கப்பட்டார். தற்போது ஓய்வு பெற்ற பின் அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்து, அராரியா மற்றும் ஜமால்பூர் தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் தோல்வியடைந்தார்.
News November 15, 2025
J.K.ரௌலிங் பொன்மொழிகள்

*உலகை மாற்றுவதற்கு நமக்கு மந்திரம் தேவையில்லை. நமக்குத் தேவையான எல்லாச் சக்தியையும் நாம் ஏற்கனவே நமக்குள் சுமந்து செல்கிறோம். *நாம் அனைவரும் நமக்குள் அதிசயங்களை வைத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வது அவசியமானது. *அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கும் கற்பனைதான் அடித்தளம். *நான் கடின உழைப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை நம்புகிறேன், பெரும்பாலும் இரண்டாவதை அடைவதற்கு முதலாவது வழிநடத்துகிறது.


