News June 19, 2024

தனிநபர் சராசரி செலவினத்தில் தமிழகம் முன்னிலை

image

தனிநபர் செலவினத்தில் தமிழகம் முன்னிலை வகிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் NSSO வெளியிட்டுள்ள 2022-23க்கான அறிக்கைபடி, நகர்ப்புறங்களில் ₹7630, கிராமப்புறங்களில் ₹5310 தனிநபர் சராசரி செலவினமாக உள்ளது. இதன் மூலம் கிராமம், நகரம் என இரண்டிலும், தனிநபர் சராசரி செலவினம் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியாவின் சராசரி செலவின அளவு கிராமங்கள்-₹3773, நகரங்கள்-₹6459.

Similar News

News September 15, 2025

இந்தியாதான் முன்பு உலகை வழிநடத்தியது: RSS தலைவர்

image

3,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தான் உலகை வழிநடத்தியதாக RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த நாடுகளையும் அடக்கவோ, வர்த்தகத்தை அழிக்கவோ மதமாற்றவோ இல்லை எனவும், மாறாக சென்ற இடங்களில் எல்லாம் கலாச்சாரம், அறிவை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நமது மூதாதையர்கள் நமக்கு வழங்கிய ஞானம், இந்தியாவை 3,000 ஆண்டுகளாக சிறந்த நாடாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News September 15, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 459 ▶குறள்: மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. ▶பொருள்: மஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.

News September 15, 2025

இதனால் தான் நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது

image

பாலிவுட் நடிகை <<17692896>>திஷா பதானியின்<<>> உ.பி., வீட்டில், 12-ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. திஷாவின் தந்தை ஜகதீஷை குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜகதீஷின் இன்னொரு மகள் குஷ்பு, சாமியார் அனிருத்தாச்சார்யாவை விமர்சித்ததே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. 25 வயது வரை திருமணமாகாத பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என அந்த சாமியார் கூறியிருந்தார்.

error: Content is protected !!