News June 19, 2024

தமிழகத்தை உலுக்கும் கள்ளச்சாராய மரணங்கள்..!

image

கடந்த ஆண்டு மே மாதத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, கள்ளச்சாராய நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 10 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 15, 2025

தமிழகத்திற்கு நெருக்கமான யூடியூபர் தோல்வி

image

யூடியூபில் 96 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட பிஹார் யூடியூபர் மனிஷ் காஷ்யப், 50,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஜன்சுராஜ் கட்சி சார்பில் சான்பாடியா தொகுதியில் போட்டியிட்ட அவர், 37,000 வாக்குகளை பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளார். இவர், தமிழ்நாட்டில் பிஹாரிகள் அடித்து கொல்லப்படுவதாக வீடியோ வெளியிட்டு, பின்னர் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 15, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 520 ▶குறள்: நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. ▶பொருள்: மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

News November 15, 2025

பிஹார் தாக்கம்: பங்குச்சந்தை நிலவரம் என்ன?

image

பிஹார் வாக்கு எண்ணிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள், வார இறுதிநாளான நேற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. இருப்பினும், வர்த்தக நேர முடிவில் சற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.11 புள்ளிகள் உயர்ந்து 84563 புள்ளிகளுடன் நிறைவு செய்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 31 புள்ளிகள் உயர்ந்து 25,910 புள்ளிகளுடன் நிறைவு செய்தது.

error: Content is protected !!