News June 19, 2024

இன்று இரவே பிரேத பரிசோதனை நடத்த உத்தரவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களை, இன்று இரவே பிரேத பரிசோதனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவிந்தராஜ் என்பவர் விற்ற பாக்கெட் சாராயத்தை வாங்கிக் குடித்ததில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட 70க்கும் அதிகமானோர், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News September 15, 2025

இந்தியாதான் முன்பு உலகை வழிநடத்தியது: RSS தலைவர்

image

3,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தான் உலகை வழிநடத்தியதாக RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த நாடுகளையும் அடக்கவோ, வர்த்தகத்தை அழிக்கவோ மதமாற்றவோ இல்லை எனவும், மாறாக சென்ற இடங்களில் எல்லாம் கலாச்சாரம், அறிவை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நமது மூதாதையர்கள் நமக்கு வழங்கிய ஞானம், இந்தியாவை 3,000 ஆண்டுகளாக சிறந்த நாடாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News September 15, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 459 ▶குறள்: மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. ▶பொருள்: மஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.

News September 15, 2025

இதனால் தான் நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது

image

பாலிவுட் நடிகை <<17692896>>திஷா பதானியின்<<>> உ.பி., வீட்டில், 12-ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. திஷாவின் தந்தை ஜகதீஷை குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜகதீஷின் இன்னொரு மகள் குஷ்பு, சாமியார் அனிருத்தாச்சார்யாவை விமர்சித்ததே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. 25 வயது வரை திருமணமாகாத பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என அந்த சாமியார் கூறியிருந்தார்.

error: Content is protected !!