News June 19, 2024

கள்ளக்குறிச்சி: காவலர்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

image

கள்ளச்சாராய பலி எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் கவிதா, பாண்டிசெல்வி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, திருக்கோவிலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், SI, எழுத்தாளர், சிறப்பு SI உள்ளிட்ட அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News March 13, 2026

எரித்து பொசுக்குவோம்… USA-க்கு ஈரான் எச்சரிக்கை

image

ஈரான் ராணுவம் அமெரிக்கா – இஸ்ரேலுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் துறைமுகங்கள் மீது மிகச்சிறிய அளவிலான தாக்குதல் நடத்தினாலும் கூட, கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க நலன்களுக்கு உதவும் அனைத்து எண்ணெய் & எரிவாயு உள்கட்டமைப்புகளையும் எரித்து அழிப்போம் என்றும் எச்சரித்துள்ளது.

News March 13, 2026

கரூர் வழக்கில் மோதும் செந்தில் பாலாஜி – விஜயபாஸ்கர்

image

கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டதை, அதிமுக Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர் குறிப்பிட்டிருந்தார். தனக்கு சம்மன் கொடுத்தால் விஜயபாஸ்கருக்கு என்ன என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், சம்மன் வந்தால் நடந்ததை சொல்லிவிட்டு வர வேண்டியதுதானே என்று செந்தில் பாலாஜியை மீண்டும் விஜயபாஸ்கர் கேட்டுள்ளார். இது கரூர் அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

News March 13, 2026

வீட்டு கேஸ் சிலிண்டர்.. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

image

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையை மத்திய அரசு அமைத்துள்ளது. இது மக்களிடையே நிலவும் அச்சங்களை போக்கும். SM-களில் பரவும் வதந்திகளை கண்காணித்து, அதன் உண்மைநிலையை விளக்க உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விற்பனையில் தட்டுப்பாடு இல்லை என அரசு விளக்கமளித்துள்ளது.

error: Content is protected !!