News June 19, 2024

திமுக அமைச்சருக்கு தொடர்பு: அண்ணாமலை

image

23 உயிர்களை பறித்த மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம் நடந்த ஓர் ஆண்டில், கள்ளக்குறிச்சியில் மீண்டும் அதேபோன்ற சம்பவத்தில் 5 பேர் பலியானதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். கள்ளச்சாராய வியாபாரிகளுடன் அமைச்சர் மஸ்தான் தொடர்பில் இருப்பது தெரிந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். மஸ்தானையும், விற்பனையை தடுக்காத அமைச்சர் முத்துசாமியையும் பதவி நீக்கும்படியும் அவர் வலியுறுத்தினார்.

Similar News

News March 20, 2026

காரைக்குடியில் (NDA) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

சிவகங்கை, காரைக்குடி சட்டமன்ற தொகுதி NDA கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கண்ணங்குடி ஒன்றியம் 1,2,3,4,5,6 ஆகிய ஒன்றிய கவுன்சிலர் வார்டுக்கான ஒன்றிய கவுன்சிலர் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு திருத்தம் செய்யப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலை எப்படி வார்டு வாரியாக வாக்காளர்களை நேரில் சென்று கணக்கெடுப்பு செய்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

News March 20, 2026

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

image

நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. ஏற்கெனவே, அரியலூர், திருவாரூர், நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவு முதலே சில இடங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. உங்கள் ஊரில் மழையா?

News March 20, 2026

CPI கட்சியால் CPM அதிருப்தியா?

image

காங்.,க்கு கூடுதல் தொகுதி ஒதுக்கிய திமுக, புதிதாக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு இரண்டு இலக்க சீட்டை கொடுக்க தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு காங்., தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் கொடுத்ததால், தங்களுக்கும் கூடுதல் தொகுதிகள் வேண்டுமென விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அழுத்தம் கொடுத்து வந்தன. ஆனால், CPI கட்சி 5 சீட்களுக்கு ஒப்புக்கொண்டதால், CPM அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!