News June 19, 2024

எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது புகாரளித்தது பினாமியா?

image

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தனது மனைவி, மகளை மிரட்டி சொத்தை அபகரித்ததாக காவல்நிலையத்தில் கரூரை சேர்ந்த பிரகாஷ் புகார் கொடுத்துள்ளார். இவர் புகாரில்தான் பைனான்சியர் கரூர் அன்புநாதனும் கடந்த ஆண்டு கைதானார். இந்த பிரகாஷ், எம்ஆர் விஜயபாஸ்கரின் பினாமி, அவரின் பணத்தில் தனது மனைவி, மகள் பெயரில் பிரகாஷ் சொத்து வாங்கியதே பிரச்னைக்கு காரணமென்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Similar News

News April 2, 2026

ஒரு சிகரெட்.. வாழ்க்கையில் 19.5 நிமிடங்கள் காலி!

image

ஒருவர் புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் அவரது வாழ்நாளில் 19.5 நிமிடங்களை குறைப்பதாக லண்டன் யூனிவர்சிட்டி காலேஜ் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. ஒரு சிகரெட்டால் பெண்களுக்கு 22 நிமிடங்களும், ஆண்களுக்கு 17.5 நிமிடங்களும் ஆயுள் குறைகிறதாம். அப்படியெனில் ஆண்டுக்கணக்கில் பிடிக்கும் சிகரெட்களால் எவ்வளவு ஆயுள் குறையும் எனக் கணக்கிட்டுப் பாருங்கள். இது போதாதென்று சிகரெட்டால் 27 வகையான கேன்சர் ஆபத்தும் உள்ளதாம்.

News April 2, 2026

போர்.. இந்தியாவுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

image

ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு ஈரான் உறுதியளித்துள்ளது. நமது இந்திய நண்பர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் அறிவித்துள்ளது. போர் காரணமாக 19 எண்ணெய்க் கப்பல்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் அங்கு சிக்கியுள்ளனர். மத்திய அரசின் ராஜாங்க ரீதியான நடவடிக்கையால் சில கப்பல்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளன.

News April 2, 2026

அபிஷேக் சர்மாவை கேப்டனாக்காதது ஏன்? யுவராஜ்

image

SRH கேப்டன்சியை அபிஷேக் சர்மாவுக்கு வழங்காததற்கு யுவராஜ் அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த 7 சீசன்களாக SRH அணிக்காக சிறப்பாகவும் அர்ப்பணிப்புடனும் விளையாடி வரும் அவருக்கு, நிச்சயமாக கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என யுவி கூறியுள்ளார். பஞ்சாப் மாநில அணிக்கு அவர் கேப்டனாக உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். நடப்பு சீசனில் SRH அணியை இஷான் கிஷன் வழி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!