News June 19, 2024
செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி ஓராண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40ஆவது முறையாக ஜூன் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ED வழக்கு மீதான தீர்ப்பை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி சார்பில் புதிதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 11, 2025
TET தேர்வு: மேல்முறையீடு செய்கிறது தமிழக அரசு

TET தேர்வு கட்டாயம் என்ற SC-யின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் TET-ல் தேர்ச்சி பெற வேண்டும்; அப்படி இல்லையென்றால் கட்டாய ஓய்வு வழங்கலாம் என்று செப்.1-ம் தேதி SC தீர்ப்பளித்தது. இதனால், சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அரசு மேல்முறையீடு செய்கிறது.
News September 11, 2025
வெற்று ஊசியை செலுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

உங்கள் உடம்பில் வெற்று ஊசியை செலுத்தினால் அது உங்கள் உயிருக்கே ஆபத்து என சொன்னால் உங்களால நம்பமுடிகிறதா? வெற்று ஊசியில் இருக்கும் காற்று ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துமாம். இதனால் அதிகபட்சமாக மாரடைப்பு கூட ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், ஊசியில் இருக்கும் காற்றின் அளவு, செலுத்தப்படும் இடத்தை பொருத்து விளைவானது மாறுபடும். எனவே, விளையாட்டுக்கு கூட இத பண்ணாதீங்க. SHARE.
News September 11, 2025
டிரெண்டாகும் புதிய வகை ❤️காதல்❤️ இனி ‘No Pain’

Situationship, Flirtationship போன்றவற்றுக்கே அர்த்தம் புரியாத நிலையில், ‘Date them till you hate them’ என்ற புது டிரெண்ட் வந்துவிட்டது. பார்ட்னருடன் பிரச்னை ஏற்பட்டு, அது பொறுத்துக்கொள்ள முடியாத கட்டத்திற்கு போனால், சண்டை- சச்சரவு என டிராமா இல்லாமல் அமைதியாக கழண்டு கொள்ளலாமாம். இந்த பிரேக் அப் அவ்வளவு வலிக்காது என்றும், ‘அப்பாடா தப்பிச்சோம்’ என்ற உணர்வுதான் இருக்கும் எனவும் கூறுகின்றனர்.