News June 19, 2024
கள்ளச்சாராயம் விவகாரத்தில் திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்

கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ஏற்கெனவே கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததாகக் கூறிய அவர், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தாத திமுகவுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும், அதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 13, 2026
கனிமொழியை முற்றுகையிட்ட மக்கள்.. பரபரப்பு

தூத்துக்குடியில் +2 மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நியாயம் வேண்டும் என்று கிராம மக்கள் 2-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாணவியின் குடும்பத்தினரை அமைச்சர் கீதா ஜீவன் உடன் இணைந்து MP கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. இவ்வளவு தாமதமாக ஏன் வந்தீர்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
News March 13, 2026
CEC-யை பதவி நீக்க தீர்மானம்… 193 MP-கள் கையெழுத்து!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தில் 193 எதிர்க்கட்சி MP-கள் கையெழுத்திட்டுள்ளனர். இதனை, விரைவில் லோக்சபா (அ) ராஜ்யசபாவில் சமர்ப்பிக்க உள்ளனர். தேர்தல் ஆணையரை பதவிநீக்கம் செய்ய கோருவது நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும். தேர்தல் முறைகேடுகள் மற்றும் எதிர்க்கட்சிகள் மீது பாகுபாடு காட்டுவதாக அவர்மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
News March 13, 2026
வீட்டு சிலிண்டர் கிடைக்காது.. BIG SHOCKING

போர் பதற்றத்துக்கிடையே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இன்னும் 2 வாரங்களுக்கு இதே நிலை நீடித்தால் வீட்டு உபயோக சிலிண்டர் கூட கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாட்டால் சாலையோர கடைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


