News June 19, 2024
திருச்சி-50,280 கிலோ தூசி அகற்றம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று 17 கிலோமீட்டர் மழை நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் 50,280 கிலோ தூசி மற்றும் வடிகால் வண்டல் நீக்கப்பட்டது. இறுதியாக திருச்சியில் இன்று 17 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News March 15, 2026
திருவானைக்காவல்: 8 திசைகளில் கொடியேற்றம்

தமிழக சிவன் கோயில்களில் சிதம்பரத்திற்கு பிறகு கோயிலின் 8 திசைகளில் கொடியேற்றம் நடைபெறுவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் மட்டும்தான். அதன்படி, இன்று மேற்கில் மகர கொடியும், வடமேற்கில் மான் கொடியும், வடகிழக்கு குதிரை கொடியும், வடகிழக் கில் ரிஷப கொடியும், கிழக்கில் யானை கொடியும், தென் மேற்கில் ஆடும், தெற்கில் எருமையும், தென்மேற்கில் பூதம் என 8 திசை பாலகர்களின் வாகனங்கள் கொடிகளாக ஏற்றப்பட்டன.
News March 15, 2026
திருச்சி: கேஸ் சிலிண்டர் வாங்க போறீங்களா? கவனம்!

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு, டீலர் உங்களுக்கு சிலிண்டர் வழங்க மறுத்தாலோ அல்லது கூடுதல் பணம் கேட்டாலோ நீஙகள் தயங்காமல் Indane Gas: 1800-2333-555, 7718955555. Bharat Gas:1800-22-4344, 7715012345. HP Gas: 1800-2333-555, 9493602222 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம். SHARE!
News March 15, 2026
திருச்சி: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


