News June 19, 2024
BREAKING: கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் கள்ளச்சாராயம் குடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் சுரேஷ், பிரவீன், சேகர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News March 12, 2026
Cricketer of the Year விருது பெறும் சுப்மன் கில்!

டெஸ்ட் & ODI கேப்டன் சுப்மன் கில்லுக்கு, ‘Cricketer of the Year’ விருதை BCCI வழங்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 2025-ல் சர்வதேச கிரிக்கெட்டில் 35-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ள கில், 1764 ரன்களை குவித்துள்ளார். T20 WC-க்கான அணியில் இடம் கிடைக்காத நிலையிலும், இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் 15-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
News March 12, 2026
சென்செக்ஸ் 829 புள்ளிகள் சரிவு

தொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. சென்செக்ஸ் 829.29 புள்ளிகள் குறைந்து 76,034.42 புள்ளிகளாக வர்த்தகமானது. நிப்டி 227.70 புள்ளிகள் சரிந்து 23,639.15 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பேரல் கச்சா எண்ணெய் விலை $100 மேல் உயர்ந்ததால், முதலீட்டாளர்கள் அதிகளவில் வெளியேறியதாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ், டாடா ஸ்டீல் பங்குகளின் மதிப்பும் சரிவை சந்தித்தன.
News March 12, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர்.. தமிழக அரசு அதிரடி

கேஸ் தட்டுப்பாட்டு காரணமாக பல இடங்களில் வீட்டு உபயோக சிலிண்டரை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், வீட்டு சிலிண்டர்களை வணிக தேவைக்கு பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அவ்வாறு பயன்படுத்தினால் சிலிண்டர் பறிக்கப்படும் என்றும், இதுகுறித்து 044- 28592828 மற்றும் 1967 ஆகிய எண்களில் புகாரளிக்கலாம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. SHARE IT


