News June 19, 2024
தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது

நெல்லை மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குத்தகை காலம் 2028இல் நிறைவடையும் நிலையில், தொழிலாளர்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், அவர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும்வரை யாரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.
Similar News
News March 6, 2026
ஒரே இடத்தில் ஸ்டாலின், விஜய்.. அரசியலில் பரபரப்பு

திருச்சியில் இம்மாத இறுதியில் தவெகவின் 3-வது மாநில மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் 12-வது மாநில மாநாடும் வருகிற 9-ம் தேதி திருச்சியில்தான் நடைபெறவுள்ளது. திருச்சி எப்போதும் அரசியல் கட்சிகளுக்கு திருப்பம் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி இருக்கையில், தேர்தல் நெருங்கும் நிலையில் அங்கு ஸ்டாலின், விஜய் அடுத்தடுத்து மாநாடு நடத்தவிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
News March 6, 2026
கடிகார முள் ஏன் வலது பக்கமாக சுற்றுகிறது தெரியுமா?

கடிகார முள்களின் திசையை பற்றி புரிந்துகொள்ள நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். இயந்திர கடிகாரங்களுக்கு முன்பு மக்கள் நேரத்தை அறிய சூரியக் கடிகாரத்தை பயன்படுத்தினர். தரையில் நிறுத்திய குச்சியின் நிழல் சூரியன் நகர்வுக்கு ஏற்ப இடமிருந்து வலமாக நகரும். அதை வைத்தே மக்கள் நேரத்தை கணித்து வந்தனர். அந்த நிழலே நவீன கடிகாரத்தின் கடிகார முள்களாக மாறியுள்ளது. SHARE IT.
News March 6, 2026
இனி 6 மாதம் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான ஒப்பந்த செவிலியர்களுக்கு 6 மாதம் ஊதியத்துடன் <<19201855>>மகப்பேறு விடுப்பு<<>> வழங்க TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். பிறகு அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிலையில் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


