News June 19, 2024
தபால் வாக்கு செலுத்த வசதி ஏற்படுத்தித் தரப்படும்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மூத்த குடிமக்கள் தபால் வாக்கு செலுத்த வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்தொகுதியின் MLA புகழேந்தி காலமானதைத் தொடர்ந்து அங்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசாருக்கு தபால் வாக்கு செலுத்த வசதி ஏற்படுத்தித் தரப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 12, 2026
ஃபரூக் அப்துல்லாவின் Z+ பாதுகாப்பில் சந்தேகம்: ஓமர்

துப்பாக்கி சூட்டில் <<19359220>>ஜம்மு காஷ்மீர் Ex CM ஃபரூக் அப்துல்லா மயிரிழையில் உயிர் தப்பியது<<>> குறித்து ஓமர் அப்துல்லா சந்தேகம் தெரிவித்துள்ளார். தன் தந்தைக்கு மிக நெருக்கமாக குண்டு பாய்ந்ததாகவும், எனினும் சுட்டவரை தடுத்து பாதுகாப்பு குழு படுகொலை முயற்சி தோல்வியடைய செய்ததாகவும் கூறியுள்ளார். அத்துடன் Z+ NSG பாதுகாப்பு உடைய Ex CM-ஐ எப்படி ஒருவரால் நெருங்கிச் செல்ல முடிந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 12, 2026
மார்ச் 12: வரலாற்றில் இன்று

*1930 – மகாத்மா காந்தி பிரிட்டிஷ் அரசின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை தொடங்கினார். 1954 – சாகித்ய அகாடமி இந்திய அரசால் தொடங்கப்பட்டது. *1993 – மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர். * 1984 – இந்திய பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பிறந்த தினம். * 2009 – தமிழ்த் திரைப்பட நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் நினைவு தினம்.
News March 12, 2026
சிலிண்டர் தட்டுப்பாட்டால் திருமணம் ரத்து

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக திருமண மண்டப உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளது. சிலிண்டர் பற்றாக்குறையால் வந்த திருமண மண்டபங்களில் வந்த விருந்தினர்களுக்கு உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போர்கால அடிப்படையில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருமண மண்டப உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


