News June 19, 2024
ஏசி விலை 6% – 8% வரை உயர்வு

வெப்பத்தில் இருந்து தப்ப ஏசியை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால், அதன் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2023இல் 11 லட்சம் ஏசி விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டில் 15 லட்சம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல் தேவை அதிகரித்த நேரத்தில் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளதால், ஏசி விலையை முன்னணி நிறுவனங்கள் 6%-8% வரை அதிகரித்துள்ளன.
Similar News
News March 19, 2026
கட்சி தாவிய ஒரு நாளில் தேர்தலில் போட்டியிட சீட்

அசாம் மாநிலத்தில் வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 88 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், அசாம் CM ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜலுக்பரி தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த MP பிரத்யுத் போர்டோலோய்-க்கு ஒரே நாளில் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. அவர் திஸ்பூர் தொகுதி வேட்பாளராக களமிறங்குகிறார்.
News March 19, 2026
HDFC சேர்மன் பதவி விலகினார்.. மிகப்பெரிய இழப்பு!

HDFC வங்கியின் பகுதிநேர சேர்மன் அசோக் சக்ரவர்த்தியின் ராஜினாமா பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘நிஃப்டி50’-ல் முன்னணி வகிக்கும் HDFC-யின் பங்குகள் 5% சரிவை சந்தித்ததுடன், நிஃப்டியும் 2.5% சரிந்துள்ளது. நிறுவனத்தின் அண்மை செயல்பாடுகள், தனது தனிப்பட்ட விழுமியங்கள் & அறநெறிகளுடன் ஒத்துப்போகாததால் விலகியதாக அவர் கூறியுள்ளது, முதலீட்டாளர்கள் நம்பிக்கையை பாதித்துள்ளதே சரிவுக்கு காரணம்.
News March 19, 2026
+2 மாணவி வன்கொடுமை: இளைஞர் அதிரடி கைது

தூத்துக்குடி, விளாத்திகுளத்தில் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாகக் கூறி 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சாயல்குடியை சேர்ந்த முனீஸ்வரனை செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசார் பிடித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. குற்றவாளியை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி மாணவியின் உறவினர்கள் 9 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


