News June 19, 2024

அஜித் பவாரின் மனைவி போட்டியின்றி தேர்வு

image

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா மாநிலங்களவை எம்.பியாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னும் 4 வருட பதவிக்காலம் உள்ள நிலையில், என்சிபியின் பிரபுல் படேல் ராஜினாமா செய்ததால், காலியான பதவிக்கு அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்ற அவர், தற்போது மாநிலங்களவை எம்.பி ஆகிறார்.

Similar News

News March 24, 2026

இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (24.03.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

News March 24, 2026

BREAKING: தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

image

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். திமுக ஒதுக்க முன்வந்த தொகுதிகளின் எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு செய்த பரிந்துரையும் மநீம உறுப்பினர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என அவர் கூறியுள்ளார். எனினும், திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக, TN & புதுச்சேரியில் போட்டியிட டார்ச் லைட் சின்னத்தை மநீம பெற்றிருந்தது.

News March 24, 2026

பிலிப்பைன்ஸில் எரிபொருள் அவசரநிலை பிறப்பிப்பு

image

மத்திய ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், நாட்டில் எரிபொருள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. இதுவே உலகின் முதல் எரிபொருள் அவசர நிலையாகும். பெர்சியன் வளைகுடா பகுதிகளில் இருந்தே 98% கச்சா எண்ணெய்யை பிலிப்பைன்ஸ் பெறுகிறது.

error: Content is protected !!