News June 19, 2024
இன்று ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’

அரசின் நலத் திட்டங்கள் மற்றும் சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் தலைமையில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று காலை 9 மணிக்கு சேலம் மாவட்டம் தலைவாசலில், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில், இத்திட்டம் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News March 7, 2026
சேலம்: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

சேலம் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!
News March 7, 2026
சிலிண்டர் விலை உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி!

சேலம்: ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் எரிசக்தி விலை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று அதிகரிக்கப்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டர் (14.2 கிலோ): ₹60 உயர்ந்து ₹928.50-க்கு விற்பனையாகிறது.வணிக சிலிண்டர் (19 கிலோ): ₹115 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இது வியாபாரிகள் மத்தியில் கவலையடைந்துள்ளனர்.
News March 7, 2026
கெங்கவல்லியில் தட்டி தூக்கிய நிர்வாகி!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சியில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 20 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, திமுக பேரூர் செயலாளர் பாலமுருகன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகி அண்ணாதுரை உடனிருந்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் கெங்கவல்லியில் திமுகவின் வெற்றிக்கு பாடுபடப்போவதாக கட்சியில் இணைந்தவர்கள் உறுதி அளித்தனர்.


