News June 19, 2024

புதுக்கோட்டையில் ஜமாபந்தி தொடங்கியது

image

புதுகை மாவட்டத்தில் 1433 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று தொடங்கியது. புதுகை வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் வருவாய்த்துறையினரின் நிலஅளவைக் கருவிகள், சங்கிலிகள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றை ஆட்சியர் மெர்சி ரம்யா பார்வையிட்டார். அப்போது
நெடுஞ்சாலை நிலமெடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வட்டாட்சியர் பரணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News

News November 3, 2025

புதுக்கோட்டை: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 3, 2025

புதுகை: அறிவுரை கூறியவருக்கு அருவாள் வெட்டு

image

விராலிமலை, பெரிய முள்ளிப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது நண்பருடன் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் (38), ஏன் வேகமாக சென்றீர்கள்? என கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவனின் தந்தை கருப்பையா அவரது தம்பி கோவிந்தன், இருவரும் பாண்டியனை அருவாளால் வெட்டியுள்ளனர். இது தொடர்பாக இரண்டு பேரையும் மண்டையூர் போலீசார் கைது செய்யது சிறையில் அடைத்தனர்.

News November 3, 2025

புதுகை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!