News June 19, 2024
புதுக்கோட்டையில் ஜமாபந்தி தொடங்கியது

புதுகை மாவட்டத்தில் 1433 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று தொடங்கியது. புதுகை வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் வருவாய்த்துறையினரின் நிலஅளவைக் கருவிகள், சங்கிலிகள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றை ஆட்சியர் மெர்சி ரம்யா பார்வையிட்டார். அப்போது
நெடுஞ்சாலை நிலமெடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வட்டாட்சியர் பரணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Similar News
News March 12, 2026
புதுக்கோட்டை: உங்களை தேடி வரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <
News March 12, 2026
புதுக்கோட்டை: அம்பேத்கர் சிலைக்கு தலைப்பாகை – பரபரப்பு

புதுகை பழைய பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் சிலைக்கு நேற்று மர்ம நபர்கள் தலைப்பாகை கட்டி சென்றனர். அம்பேத்கர் சிலையை சுற்றி கூண்டுகள் அமைத்து பூட்டப்பட்டுள்ளதையும் மீறி தலைப்பாகை கட்டி உள்ளனர். அதனைத் தொடர்ந்து அதிகாலை போலீசார் விரைந்து வந்து அந்த தலைப்பாகை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நகர காவல் துறையினர் அப்பகுதி உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.
News March 12, 2026
புதுக்கோட்டை: திருமணம் ஆகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா செய்தி குறிப்பு வெளியிடுள்ளார். அதில், 2027 ஆட்சேர்ப்பு ஆண்டிற்கான அக்னிவீர் பொதுப்பணி பிரிவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இராணுவத்தில் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம் இதற்கு வருகிற ஏப்.1ஆம் தேதிக்குள்<


