News June 18, 2024

மாதம் ₹4000 உதவித் தொகையுடன் ஓராண்டு பயிற்சி

image

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர் பயிற்சி வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான ஓராண்டு பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். மாதம் ₹4000 உதவித் தொகை, உணவு, உடை, தங்குமிடம் இலவசம். விவரங்களுக்கு அறநிலையத்துறை இணையதளத்தை காணலாம்.

Similar News

News March 13, 2026

பெண் மீது சிறுநீர் கழித்தவர் மரணம்.. அதிர்ச்சி

image

சென்னையில் கலைச்செல்வன் தனது நண்பருடன் ஆட்டோவில் பயணித்துள்ளனர். குடிபோதையிலிருந்த கலைச்செல்வன், ஆட்டோவில் இருந்தவாறே வெளியில் சிறுநீர் கழித்துள்ளார். இது அங்கு நடந்து சென்ற பெண் மீது பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுற்றி இருந்தவர்கள் தாக்கியதில், கலைச்செல்வன் உயிரிழந்தார். எனவே, அவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News March 13, 2026

தவெக கூட்டணி முடிவில் திடீர் மாற்றமா?

image

NDA-வில் தவெக இணைய வாய்ப்பிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், உரிய அங்கீகாரம் கிடைத்தால் NDA கூட்டணியில் சேர பெரும்பாலான <<19372536>>மா.செ.,க்கள் பச்சைக் கொடி<<>> காட்டியுள்ளனராம். இதனையடுத்து, விஜய்யின் நெருங்கிய நண்பர் ஒருவர் பாஜக தலைமையிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. NDA-வில் தவெகவுக்கு 45 சீட் கொடுக்க முன்வந்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

News March 13, 2026

இனி RTI-ல் பொதுத்தேர்வு விடைத்தாளை பெறலாம்!

image

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகல்களை RTI-ன் கீழ் விண்ணப்பித்து பெறலாம் என மாநில தகவல் ஆணையம் (SIC) தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த SIC, RTI கட்டண விதிகளின்படி பக்கத்திற்கு ₹2 செலுத்தி விடைத்தாள் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. விடைத்தாள் பராமரிக்கப்படும் அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்றுக்கொள்ளலாமாம்.

error: Content is protected !!