News June 18, 2024
ஆங்கிலப் பள்ளிகள் மீதான மோகம் தற்கொலைக்கு சமம்

ஆங்கிலப் பள்ளிகள் மீதான பெற்றோர்களின் மோகம், தற்கொலைக்கு சமம் என தேசிய ஆராய்ச்சி கல்வி மற்றும் கவுன்சிலின் தலைவர் டி.பி.சக்லானி கூறியுள்ளார். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தனியார் பள்ளிகளில் பயிற்சி இல்லாத ஆசிரியர்கள் பணிபுரிவதாகவும், ஆங்கிலப் பள்ளிகள் மீதான மோகத்தால் பெற்றோர்கள் அங்குச் சென்று தங்களது பிள்ளைகளை படிக்க வைப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
Similar News
News March 14, 2026
‘அடிமை கூட்டணி’: கடலூர் அமைச்சர் அறிக்கை

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை, தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசையும், அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
News March 14, 2026
தவெகவுடன் கூட்டணியா? EPS-க்கு புது தலைவலி

அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து விஜய் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஒருவேளை அதிமுக கூட்டணியில் தவெக இணைந்தால் 50 – 60 சீட்களை கொடுக்க வேண்டும். அத்துடன் DCM பதவியையும் அளிக்க வேண்டும் என்ற டிமாண்ட்களும் வைக்க தவெக தயாராகவுள்ளதாம். ஏற்கெனவே கூட்டணி ஆட்சி ஆகாது என்ற கருத்தில் நிற்கும் EPS-க்கு இது புது தலைவலியை கொடுத்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News March 14, 2026
சமையல் எண்ணெய் விலை உயர்ந்தது!

போர் சூழல் காரணாக சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ₹110-க்கு விற்பனையான 1 லிட்டர் பாமாயில் தற்போது ₹122 ஆக உயர்ந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் ₹155லிருந்து ₹175 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விலையும் லிட்டருக்கு ₹5 வரை உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


