News June 18, 2024
திருச்சியில் 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்.!

திருச்சியில் தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில் ரவுடி ராஜா என்பவரையும், வீட்டினுள் அத்துமீறி நுழைந்து பணம்,விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை திருடியதாக வெற்றிவேல் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் விசாரணையில் 2 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததால், இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி கமிஷனர் இன்று உத்தரவிட்டார்.
Similar News
News August 20, 2025
திருச்சி வரும் குடியரசு தலைவர்

இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வரும் செப்டம்பர் 3 தேதி தனி விமானம் மூலம் திருச்சி வருகை தந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் புறப்பட்டுச் செல்கிறார். அதையடுத்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொள்ளிடம் கரைக்கு வருகை தந்து பின்னர், ஸ்ரீரங்கம் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம் செய்கிறார்.
News August 20, 2025
திருச்சி: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க <<17460250>>தொடர்ச்சி<<>>
News August 20, 2025
திருச்சி: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

▶️ இத்திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!