News June 18, 2024

விரல் ரேகை அளிப்போருக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

image

சிம்கார்டு, ரேஷன், வங்கி கணக்கு உள்ளிட்டவற்றுக்கு விரல் ரேகை சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி சார்பில் நாட்டு மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ள குறுந்தகவலில், பரிவர்த்தனைகளுக்கு விரல் ரேகையை பதிவிடும் முன்பு, அக்கருவியில் மெல்லிய கண்ணாடி தாள் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்து இல்லை என உறுதி செய்யும்படியும், விரல் ரேகை சேகரிப்பு ரசீதை பெறும்படியும் வலியுறுத்தியுள்ளது.

Similar News

News March 23, 2026

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்!

image

தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 26-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, தூத்துக்குடி, அரியலூர் உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று லேசான மழை பதிவானது.

News March 23, 2026

மாணவர்கள் தற்கொலையை தடுக்க புதிய கொள்கை

image

மாணவர்​களின் மனநலம் பாது​காப்​பு, தற்​கொலை தடுப்​புக்கு TN அரசு புதிய கொள்​கையை வெளி​யிட்​டுள்ளது. பள்​ளி, கல்​லூரி​களில் மனநல ஆலோ​சகர்​கள், ஆலோ​சனை மையங்​கள் மூலம் மாணவர்​களின் தனித் திறனை ஊக்​கு​விப்​பதுடன், நண்​பர்​கள் இடையே ஒருவருக்கு ஒரு​வர் உதவி செய்​து​கொள்​ளும் நல்​ ஆதரவு நடவடிக்​கைகளை தொடங்க வலியுறுத்தியுள்ளது. மனநல ஆலோ​சனைகளுக்கு 14416, 14417, 104, 1098, 181 எண்​களில் தொடர்பு கொள்ளலாம்.

News March 23, 2026

இதற்கா கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறீர்கள்?… நயினார்

image

கடலூர் GH-ல் மின்சாரம் இல்லாமல் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தது திமுக அரசின் நிர்வாக தோல்விக்கான சான்று என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். கற்காலம் போன்று சிகிச்சை அளிக்கவா ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்படுகிறது என்றும், திமுக அரசின் ஈயம் பூசும் வேலையை தமிழக மக்கள் இனி துளியும் நம்ப மாட்டார்கள் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!