News June 18, 2024

விடுமுறை தினத்தில் படையெடுத்த சுற்றுலா பயணிகள்

image

தொடர் விடுமுறையையொட்டி குமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தை அதிகமான சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து பார்வையிட்டுள்ளனர். குறிப்பாக, 15-ம் தேதி 7 ஆயிரம் பேரும், 16ஆம் தேதி 7 ஆயிரத்து 300 பேரும், பக்ரீத் பண்டிகை நாளான நேற்று 6 ஆயிரத்து 300 பேரும் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர். 3 நாட்களில் மொத்தம் 20 ஆயிரத்து 600 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 8, 2025

குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 8, 2025

குமரி: லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

image

திருவட்டார் அருகே தேமானூர் பகுதியில் அருமனையில் இருந்து ஆற்றூர் நோக்கி நேற்று இரவு ரப்பர் கட்டன்ஸ் ஏற்றி வந்த லாரி ஆற்றூரில் இருந்து தேமானூர் நோக்கி வந்த பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் பைக்கில் வந்தவர் பலியானார். பைக்கில் வந்தவர் சிதறாமல் பள்ளிக்கோணம் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (36) என தெரியவந்தது. இது குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 8, 2025

குமரியில் 39 பேருக்கு போக்சோ தண்டனை

image

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆர். ஸ்டாலின் பதவி ஏற்றத்திலிருந்த குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார். இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 39 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!