News June 18, 2024
8 இடங்களில் அகழாய்வுப் பணியை தொடக்கம்

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், 2024ஆம் ஆண்டுக்கான அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை உள்பட 8 இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த அகழாய்வுப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். பண்டைய கால தமிழர்களின் வாழ்க்கை முறை போன்ற வரலாறுகளை அறிந்துகொள்ளும் முயற்சியாக, தொல்லியல் துறை வல்லுநர்கள் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 7, 2026
EPS-ன் பொதுச் செயலாளர் பதவியை பாஜக பறிக்கும்: CM

பிஹாரில் நிதிஷ்குமாருக்கு பாஜகவால் ஏற்பட்ட கதிதான் தமிழகத்தில் EPS-க்கு ஏற்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு EPS-க்கு பதில் வேறு ஒருவரை பாஜக தேர்ந்தெடுத்து வைத்துள்ளது. EPS-ஐ இந்த தேர்தல் வரைக்கும்தான் பாஜக பொறுப்பில் வைத்திருக்கும். ஒருவேளை பாஜகவுடன் கூட்டணி வைக்க மறுத்திருந்தால் இப்போதே அவர் பதவி பறிபோயிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 7, 2026
பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்காது: மத்திய அரசு

நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிக்காது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளதாகவும், போதுமான எண்ணெய் இருப்பு உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்றும் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிக்காது என்றும் உறுதியாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 7, 2026
தமிழக அரசியலில் வியப்பான நகைப்பு: H.ராஜா

மனைவிக்கு உண்மையாக இல்லாத நபர், குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி மகளிர் தின வாழ்த்து கூறுவதாக H.ராஜா விமர்சித்துள்ளார். இப்படிப்பட்டவர்கள் தன்னை பெண்ணினத்தின் பாதுகாவலராக அடையாளம் காட்டிக் கொள்வது தமிழக அரசியலில் பார்க்க முடிந்த வியப்பான நகைப்பு என்றும் விமர்சித்துள்ள அவர், மனைவி, குழந்தைகளுக்கு துரோகம் இழைத்துவிட்டு, அதே நபர் மேடைகளில் பெண்ணுரிமை குறித்து பேசுவதாக சாடியுள்ளார். யாரை சொல்கிறார்?


