News June 18, 2024
இளைஞர் கடத்தல் – 10 பேர் கும்பலுக்கு வலை

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷவர்த்தன்(30). இவர் மதுரவாயல் பகுதி உறவினர் வீட்டில் 2 மாதமாக தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று (ஜூன்.17) பூந்தமல்லி அருகே மேட்டுக்குப்பம் சாலையில் ஹர்ஷவர்த்தன் வந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்திச் சென்றனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து ஹர்ஷவர்த்தனை கடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.
Similar News
News July 8, 2025
திருவள்ளூர் காவல் துறை எச்சரிக்கை பதிவு

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில்
Cryptocurrency முதலீடு செய்தால் லட்ச கணக்கில் பணம் கிடைக்கும் என மூன்றாம் நபர்கள் தங்களிடம் பணத்தை முதலீடு செய்ய சொன்னாலோ அல்லது பணம் கேட்டாலோ அவர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம் என திருவள்ளூர் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
News July 8, 2025
ஹவுஸ் ஓனருடன் பிரச்சனையா?

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 / 9445000412 (வாடகை அதிகாரி) புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி <
News July 8, 2025
வாடகை வீட்டில் இருப்போருக்கான உரிமைகள்

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கன புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. மூன்று மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும்